நம் குரல்

Monday, November 24, 2014

தேசியமொழி மாதக் கொண்டாட்டம்


மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், டேவான் பகாசா டான் புஸ்தாகா ஆதரவோடு தேசியமொழி மாதக் கொண்டாட்டத்தைக் கோலாலம்பூர் நேதாஜி மண்டபத்தில் கடந்த 22.11.2014 அன்று நடத்தியது. 



தேசிய மொழியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாலாயாப் பல்கலைக்கழக மாணவர்கள் திருக்குறளைத் தேசியமொழியில் மொழிபெயர்த்து விளக்கமளித்தனர். பரிசுபெற்ற சிறுகதைகளின் சுருக்கத்தை வாசித்தனர். ஜாசின் ஏ.தேவராஜனின் மலாய்க் கவிதைகளைப் படைத்தனர். மா.இராமையாவின் சிறுகதை நூலை (தேசிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டவை) தேவராஜன் அறிமுகப்படுத்திப் பேசினார். 


மன்னர் மன்னன் தலைமையில் நடைபெற்ற கருத்தாய்வில் சீ.அருண், தமிழ் இலக்கியங்கள் தேசிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட முயற்சிகள் குறித்துப் பேசினார். நான், தேசிய இலக்கியத்தில் தமிழ் இலக்கியம் இணைக்கப்பட வேண்டியதின் 
அவசியம் குறித்துப் பேசினேன். 



டேவான் பஹாசா டான் புஸ்தாகாவின் மொழித் திட்டமிடல் பிரிவின் அதிகாரி, புவான் ஹரிணி யூசூவ் தேசிய மொழியில் எழுதும் தமிழ்ப் படைப்பாளிகளை உருவாக்கும் தம் அமைப்பின் முயற்சிகளை விளக்கினார்.

எழுத்தாளர் சங்கச் செயலாளர் ஆ.குணநாதனும்  துணைத் தலைவர் டாக்டர் ரெ.கார்த்திகேசுவும் முன்னதாகச் சங்கத்தின் முயற்சிகளையும் எதிர்பார்ப்பினையும் விரிவாக விளக்கினர். 







நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழ் எழுத்தாளர் சங்கம் டேவான் பகாசா டான் புஸ்தாகா
அமைப்போடு இந்நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. தேசிய மொழியில் எழுதும் தமிழ் எழுத்தாளர்களை உருவாக்குவது எழுத்தாளர் சங்கத்தின் நோக்கமல்ல. நம் தமிழ் இலக்கியப் படைப்புகளைத் தேசிய மொழியில் மொழிபெயர்ப்பதும் தமிழ் இலக்கியம் குறித்து தேசிய மொழியில் பதிவு செய்வதுமாகும். 

நல்ல முயற்சி.  இது தொடர வேண்டும்.

No comments:

Post a Comment