நம் குரல்

Wednesday, June 4, 2014

இருளிலிருந்து வெளிச்சத்திற்கு..



வெளிச்சம் தவிர்த்த இருளில் தனிமை இருந்தது
அந்தத் தனிமை இதமாக இருந்தது
தனிமையில் சுதந்திர உணர்வு கலந்திருந்தது
தனிமையில் வேவு பார்க்கும் கண்கள் இல்லை
வாயிலிருந்து விரும்பியவாறு சொற்கள் உதிர்ந்தன
கால்கள் விரும்பிய திசையில் பயணப்பட்டன
தனிமையில் இரகசியங்கள் இருந்தன
இரகசியங்கள் மனத்தில் மறைந்திருந்தன
இரகசியங்கள் சிலருக்கு மட்டும் தெரிந்திருந்தன
இரகசியங்களில் அழுக்குகள் இருந்தன
இரகசியங்களில் காயங்கள் இருந்தன
இரகசியங்களில் கண்ணீர்த் துளிகள் இருந்தன
இருளில் எதுவும் வெளியில் தெரியவில்லை
இருளின் தனிமை கம்பளியாய்ப் போர்த்தியிருந்தது
அந்தத் தனிமை சுகமாய் இருந்தது
வெளிச்சம் பரவியதால் இருள் மறைந்தது
இருளிலிருந்த தனிமை தன்னை இழந்தது
ஒளிவெள்ளம் அதன் கண்களைக் கூசச் செய்தது
தனிமையின் சுதந்திர உணர்வு குறைந்தது
வாய்ச்சொற்கள் நிதானிக்கத் தொடங்கின
கால்கள் யோசிக்கத் தொடங்கின
இகசியமாய் மறைந்திருந்த அழுக்குகள் காயங்கள்
கண்ணீர்த்துளிகள் ஒளிவெள்ளத்தில் அம்பலமாயின
இன்னும் இரகசியமேதும் மிஞ்சியுள்ளதா?
சுற்றிலும் வேவு பார்க்கும் கண்கள்


வெளிச்ச வெள்ளம் பரவி
உடலெங்கும் ஊடுருவினாலும்
ஒளிமழையில் நனைந்து அனுபவிக்க
நகர்ந்துகொண்டே இருக்கின்றன
கால்கள்
இருளிலிருந்து வெளிச்சத்திற்கு..
     

No comments:

Post a Comment