நம் குரல்

Wednesday, June 4, 2014

குளிர்விட்டுப் போனதால்..




அந்த மலைப்பகுதியின் காலைப்பொழுதில்
உடலில் ஊடுருவி நடுங்க வைக்கும்
குளிரை விசாரித்தபடி
வளைவான சாலையின் இடுப்பில்
பயணமான பேருந்தின் வெளியே
கண்ணில் பதிந்தது அந்தக் காட்சி

உடலோடு ஒட்டிய குளிராடை எனினும்
குளிர்வதை தாங்காது மிக நெருக்கமாய்
இடைவெளி இல்லாது நெருக்கியபடி
சாலையோரச் சுவரில் ஏறி அமர்ந்தபடி

பழகிப்போனதால் கைகளை நீட்டி
யாசிக்கும் அழகான குரங்குகளை நோக்கி
நீட்டினோம்
கைகளிலிருந்த பிஸ்கட்டுகளை

குரங்குகளைப் போலவே
மனிதர்களும்

குளிர்விட்டுப் போனபின்னே
தங்களிடையே இடைவெளி தெரிய
தள்ளி நின்று முறைத்துப் பார்த்து
ஒன்று மற்றொன்றைத் தள்ளிவிட்டு
ஏதாவது கிடைக்குமென்று கையைநீட்டி
தன் உறவுக்கு மட்டும் சேகரித்தபடி
தம் கூட்டத்துக்கு மட்டும் வாய்ப்பு என்றபடி
தோல் நிறம் மாறுபட்டவனை வெறுத்தபடி



No comments:

Post a Comment