நம் குரல்

Tuesday, February 23, 2010

மதாபிமானம்



அழாதீர்கள்!
உங்கள் கண்ணீர்த்துளிகளைத் துடைக்க
எங்கள் கைகள் நிச்சயம் நீளும்

வறுமை உங்களைத் தின்றுத்தீர்ப்பதை
வேடிக்கை பார்க்க
எங்கள் மனம் எப்படி ஒப்பும்?

போர் அரக்கனின் கொடூரப் பிடியிலிருந்து
உங்களை மீட்டெடுத்துப்
புனர்வாழ்வு தரும் பணிகளில்
எங்களின் பங்களிப்பு தவறாமல் உண்டு

இயற்கைப் பேரிடரின் கொடுங்கனவிலிருந்து
உங்களைக் காப்பாற்றிக் கைதூக்கிவிட
நாங்களும் இருக்கிறோம்

உங்கள் சுமைகளை இறக்கி வைக்க
உங்கள் வாழ்வாதாரத்திற்கு
வழிகாட்ட நாங்கள் இருக்கிறோம்

திக்கற்றுத் திரியும்
உங்கள் வாரிசுகளுக்குப் புதுவாழ்வு தருவது
எங்கள் பொறுப்பு

உலகப்பந்தின் எந்த மூளையில்
நீங்கள் இருந்தாலும் தேடி வருவோம்

எல்லாமும் சாத்தியம், நம்புங்கள்
யினும் ஒரு சின்ன நிபந்தனை!

நீங்கள் எங்கள் மதத்தினராய்
இருந்தால் போதும்!

No comments:

Post a Comment