நம் குரல்

Monday, February 15, 2010

கடவுள் மீதான வன்முறைகள்


கூடிக்கொண்டே இருக்கின்றன
கடவுள் மீதான வன்முறைகள்

கழிவறைக் காகிதத்தில்
கடவுளின் பேரைக் கிறுக்கிக்கொண்டு
தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தான் ஒருவன்

தலைதெறிக்க ஓடிவந்தவன்
கடவுள் தன்னைக் கொல்லப் பார்ப்பதாக
புகார் கூறினான்

தானறிந்த கடவுள்
இறந்து விட்டதாக ஒருவன்
தன்னிலை விளக்கம் தந்தான்

கடவுள் நல்ல கற்பனை என்று
கடவுள் மீது பின்னப்பட்ட சிந்தனைகளைக்
கலைத்துக்கொண்டிருந்தான் ஒருவன்

போரில் சிதிலமான கோயில் சிலைகளைப்
பூட்ஸ் காலால் உதைத்துச்
சிரித்துக்கொண்டிருந்தான் ஒருவன்

தான்தான் கடவுள் என்றும்
கடவுளின் அம்சம் தனக்கு உண்டென்றும்
மாயஜாலத்தில் நம்பச் செய்துகொண்டிருந்தான் ஒருவன்

எதையும் பொருட்படுத்தாமல்
நேர்த்திக் கடனை நிறைவேற்ற
ஒரு மனிதக்கூட்டமே
கோயிலை நோக்கிச் சஞ்சரித்துக்கொண்டிருந்தது

No comments:

Post a Comment