நம் குரல்

Wednesday, February 24, 2010

ரேணிகுண்டா (பட விமர்சனம் குறித்து..)

அன்புள்ள பாலமுருகனுக்கு வணக்கம்.

ரேணிகுண்டா பட விமர்சனம் சற்று வித்தியாசமாக இருந்தது.
படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் தங்கள் விமர்சனம்
படித்தபோது படத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் என்னைத்
துரத்துகிறது.

வழக்கமான சினிமாவாக இல்லாமல் மாற்றுச் சினிமாவாக இப்படம்
அமைந்திருப்பதை உணரமுடிகிறது. விமர்சனம் படித்தவுடன் ஜானி,
டப்பா, மாரி, பாண்டுரங்கன், ஆகிய ஐவரும் மனத்திற்குள்
சம்மணம் போட்டு அமர்ந்துவிட்டார்கள்

இளம் குற்றவாளிகளை மையப்படுத்தி, திரைக்கு முன்னால்
அமர்ந்திருப்பவர்களை உள்ளே ஈர்த்துக்கொள்ளும் கலையில்
இயக்குநர் வெற்றி பெற்றிருப்பதை
தங்கள் விமர்சனம் தெளிவாக்குகிறது.

வழக்கமான சினிமா உலகின் ஆர்ப்பாட்டங்களுடன் சமரசம்
செய்து கொள்ளாமல் தனித்து நிற்கும் இம்மாதிரி மாற்றுப்
படங்களுக்காகத்தான் நல்ல ரசிகன் காத்திருக்கிறான்.

நம்பி வரும் ரசிகனை அவமானப்படுத்துவது போன்று
பல படங்கள் அமைந்துவிடுகின்றன.
ரேணிகுண்டா ரசிகனின் ரசிப்புத்தன்மையை அங்கீகரிக்கிறது.

ஒரு நல்ல கவிதையைப்போன்று மனத்திற்குள் ஆழமான உணர்வு
அலைகளை எழுப்பித் தமிழ் சினிமா மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

ஒரு நல்ல படத்தை முன்மொழிந்தமைக்கு வாழ்த்துகள்!

அன்புடன்,
ந. பச்சைபாலன், மலேசியா
http://www.patchaibalan.blogspot.com/

No comments:

Post a Comment