நம் குரல்

Wednesday, February 17, 2010

ஆவிகள் உலவும் படுக்கையறை


தலையணையில் முகம் புதைத்து
தூக்கத்தின் பிடியில்
கொஞ்சம் கொஞ்சமாக எனையிழந்த
நடுநிசியின் ஏதாவது தருணங்களில்
அவற்றின் ஆட்டமும் அட்டகாசமும்
தொடங்கிவிட
படுக்கையோடு எனைத் தவிக்கவிட்டுத்
தூக்கம் தூரப்போகிறது
முகம் மூடிய விரல்களின் இடுக்குகளில்
பயக்கண்களால் துழாவுகிறேன்
தலைவிரிக் கோலத்தில்
ரத்தம் வழியும் கோரப் பற்கள்
பார்க்கச் சகியாத சிதைந்த முகங்கள்
உயிர் பிடுங்கியெறிய நீளும்
நீள்நகம் முளைத்த விரல்கள்
ஒவ்வொன்றாய் முளைக்கின்றன
கட்டிலின் கீழேயிருந்து
பின்னாலிருந்து
மேலிருந்து
இருள் அப்பிய அறையின்
எல்லா முடுக்கிலிருந்தும்

எல்லா முகங்களிலும் ஒட்டியிருக்கின்றன
நாளிதழிகளில் வண்ணத்தில்
சிதைந்திருந்த முகங்களின்
தொலைக்காட்சி மர்மத் தொடர்களில் தோன்றிய
கோர முகங்களின்
தடயங்கள்.. தடயங்கள்

No comments:

Post a Comment